இறை தூது ஒன்றே!

1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.

இறை தூது ஒன்றே
< தமிழ்/Tamil- تاميلية>
        
ஆக்கியோன்
கலாநிதி நாஜி இப்னு இப்ராஹீம் அல் அர்பஜ்


ஜாசிம் இப்னு தஇயான்
மொழிபெயர்த்தவர்
முஹம்மத் அமீன்
மீள்பார்வைசெய்தவர்
 
رسالة واحدة فقط!
        

اسم المؤلف
ناجي بن إبراهيم العرفج




ترجمةجاسم بن دعيان
مراجعة: محمد أمين

 

 

இறை தூது ஒன்றே

கலாநிதி நாஜி இப்னு இப்ராஹீம் அல் அர்பஜ்

 

 


சமர்ப்பணம்

•    நேர்மையாக, உண்மையாக சத்தியத்தை தேடுபவர்களுக்கு

•    மனச்சாட்சியும்,  விவேகமும் உள்ள அன்பர்களுக்கு

 

 

வாசிப்பதற்கு முன் சில கேள்விகள்
1.    இறை தூது ஒன்றே எனும் இந்த கை நூலின் நோக்கம் என்ன?

2.    இந்த விஷயம் பற்றி மார்க்க நூல்கள் என்ன கூறுகின்றன?

3.    இந்த விஷயம் பற்றி அல் குர்ஆன் என்ன கூறுகிறது?

4.    இதனை பற்றி உங்கள் கருத்து என்ன?

 

 

 


ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் படைப்புக்குப் பிறகு, மனித சரித்திரத்தில் மனித இனத்துக்காக கொண்டு வரப்பட்ட இறை தூதுத்துவம் ஒரே ஒரு  அடிப்படையை  மாத்திரம் கொண்டது. இந்த  இறை தூது காலத்துக்கு ஏற்றவாறு புதிய வழிகளில் மக்களுக்கு நினைவு படுத்துவதன் மூலம் அவர்களை நேர் வழியில் அழைத்துச் செல்வதற்கு பாதை அமைத்தது. ஏக இறைவனாகிய அவன் ஆதம், நூஹு, இப்ராஹீம், மூஸா, ஈசா, முஹம்மத் போன்ற இறை தூதர்கள் மற்றும் நபிமார்கள் மூலம் சத்தியத்தை இறக்கி வைத்தான். அது தான்,
“நிச்சயமாக உண்மையான இறைவன் ஒருவனே, அதனால் அவனுக்கு மாத்திரம் வணங்கி அடி பணியுங்கள்.” என்பது.


அனைத்தையும் படைத்தவனே உண்மையான இறைவன். வணங்குவதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே.


இறை தூதர்கள்    அவர்கள் கொண்டு வந்த இறை தூது
நூஹ்    அல்லாஹ் ஒருவன்.
அவனை மாத்திரம் வணங்குங்கள்.
இப்ராஹீம்    அல்லாஹ் ஒருவன்.
அவனை மாத்திரம் வணங்குங்கள்
மூஸா    அல்லாஹ் ஒருவன்.
அவனை மாத்திரம் வணங்குங்கள்
ஈசா    அல்லாஹ் ஒருவன்.
அவனை மாத்திரம் வணங்குங்கள்
முஹம்மத்    அல்லாஹ் ஒருவன்.
அவனை மாத்திரம் வணங்குங்கள்

முக்கியமான பொறுப்புக்களை நிறை வேற்றுவதற்காக ரசூல்மார்களில் உலூல் இஸ்ம் எனும் முக்கியமானவர்களையும், அல்லாஹ்வின் ரசூல்மார்கள், ஏனைய நபிமார்களில் நாங்கள்  கேள்விப்பட்ட, மற்றும் நாங்கள் கேள்விப்படாத வழி காட்டிகளை அவன் அனுப்பி வைத்தான். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் பின் வருமாறு.
1.    அல்லாஹ்விடம் இருந்து இறை தூதுத்துவத்தை பெற்று, அதனை பின்பற்றுமாறு தமது மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பித்தல்;
2.    ஏக இறைவன் கொள்கையை பின்பற்றுமாறும், அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணங்குமாறும் மக்களுக்கு கற்றுக் கொடுத்தல்;
3.    அல்லாஹ்வின் பாதையில் தமது வழி முறைகளை தமது மக்கள் பின்பற்றக் கூடிய வகையில் வார்த்தைகளாலும், செய்கையாலும் மக்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டல்;
4.    அல்லாஹ்விடம் பயபக்தியுடன் காரியம் ஆற்றவும், அவனுக்கு கீழ்படிந்து நடக்கவும், அவனது கட்டளைகளை பினபற்றவும், தமது சீடர்களுக்கு வழி காட்டல்;
5.    மார்க்க சட்டங்களையும், சிறந்த ஒழுக்க பண்புகளையும் பின்பற்றுவதற்கு தம்மை பின்பற்றும் மக்களுக்கு கற்றுக் கொடுத்தல்;
6.    பாவத்தில் மூழ்கியவர்கள், இறைவனுக்கு பதிலாக சிலைகளை வணங்கும் இணை வைப்பவர்கள், மற்றும் ஏனைய பாவங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு நேர் வழி காட்டல்;
7.    மரணத்தின் பின் நிச்சயமாக மீண்டும் எழுப்பப் படுவார்கள் என்றும், அவ்வாறு எழுப்பப் படும் நாளில் அவர்கள் செய்த காரியங்களுக்காக தீர்ப்பு வழங்கப் படும் என்றும், எவர் அல்லாஹ்வை மாத்திரம் விசுவாசம் கொண்டு நற்காரியங்களை செய்கிறாரோ அவருடைய தங்குமிடம் சுவர்க்கம் என்றும், எவர் அல்லாஹ் வுக்கு இணை வைத்து அவனுக்கு மாறு செய்கிறாரோ அவர் தங்குமிடம் நரகம் என்றும் மக்கள் மத்தியில் அறிவித்தல்;
நபிமார்கள் எனும் இறை ஞானம் பெற்ற வர்களையும், ரசூல்மார்கள் எனும் அல்லாஹ்வின் தூதர்களையும் படைத்து, அவர்கள் அனைவரை யும் அனுப்பி வைத்த இறைவன் ஒருவனே. அவனே அவர்கள் அனைவரையும் உயர் குலத்தில் பிறக்க வைத்தான். இந்த அகிலங்களையும், அதில் உல்ல சகலதையும் படைத்தவனாக அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு அவை சாட்சி பகருகின்றன. அவனது ஏகத்துவத்துக்கு சாட்சி கூறுகின்றன. இதன்படி அகிலங்கள், அதில் வாழும் மனிதர்கள், அங்கு உள்ள வஸ்துக்கள் ஆகிய அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் தான். வாழ்வு, மரணம் ஆகிய இரண்டையும் படைத்தவனும், முடிவு பெறும் நமது உலக வாழ்வு, முடிவில்லாத நித்திய வாழ்வு ஆகிய இரண்டின் சொந்தக்காரனும் படைத்த வனாகிய அவனே.
    யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைவரது மார்க்க நூல்களும் அல்லாஹ் இருப்பதையும், அவனது ஏகத்துவத்தையும் உறுதிப் படுத்து கின்றன.
    உண்மையாகவே சத்தியத்தை தேடுபவனுக்கு மார்க்க நூல்களிலும், பரிசுத்த அல் குர்ஆனிலும்  இறைவனை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு, அவற்றில் உள்ள அடிப்படை உண்மை என்ன என அறிந்துக் கொண்டு, அவற்றை தூய உள்ளத்துடன் பின்பற்றினால், அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரிய விஷேச குணாதிசயங்களை தெரிந்துக் கொள்வ தற்கும், கற்பனை தெய்வங்களை இறைவனுக்கு இணையாக்காது இருப்பதற்கும் முடியும். அப்படிப்பட்ட குணங்கள் என்ன என்பதை சற்று ஆராய்வோம்.
1.    உண்மையான இறைவன் படைத்த அல்லாஹ்வே, அவன் படைக்கப்பட வில்லை.
2.    உண்மையான இறைவன் ஒருவனே. அவனுக்கு துணை இல்லை. அவனுக்கு பண்மை இல்லை. அது போலவே, அவனுக்கு தகப்பனோ அல்லது பிள்ளையோ கிடையாது.
3.    படைப்புகளின் உருவங்களில் இருந்து அவன் பரிசுத்தமானவன். இவ்வுலகில் எந்த பார்வை யும் அவனை அடைய முடியாது.
4.    அல்லாஹ் என்றும் நிலைத்திருப்பவன். அவனுக்கு மரணம் இல்லை. அவனுக்கு ஒரு நிலையான ஸ்தானம் தேவை இல்லை. அவனது படைக்களின் உருவங்களுடன் அவனை ஒப்பிட முடியாது.
5.    அவன் தேவைகளை விட்டும் முற்றாக நீங்கியவன். அவன் சுயமாக இயங்குபவன். தனது படைப்புகளிடம் இருந்து அவனுக்கு எவ்வித தேவையும் இல்லை. அவனுக்கு எந்த தாயோ, தந்தையோ கிடையாது. அவனுக்கு மனைவியோ, பிள்ளையோ ஒரு போதும் கிடையாது. உணவு, பானங்களின் தேவையும் அவனுக்கு இல்லை. எவரது உதவியோ, உபகாரமோ அவனுக்கு அவசிய மில்லை. ஆனால் அவன் படைத்த அத்தனை படைப்புகளும் தமது தேவை அனைத்தையும் அவனிடமிருந்தே பெற்றுக் கொள்கின்றன.
6.    கீர்த்தி, பரிபூர்ணத்துவம், அழகு போன்ற உயர் பண்புகளால் அல்லாஹ் சகலவற்றில் இருந்தும் வேறுபட்டவன். எந்த ஒரு  துணையாளனும் அவனுக்கு இல்லை.  அவனது படைப்புகளில் எவருக்கும் அவனுக்கு சமமாக முடியாது. அவனை போன்று வேறு எவரும் இல்லை.
இவ்வாறான அல்லாஹ்வின் தன்மைகளையும், குணங்களையும் (அல்லாஹ்வுக்கு மாத்திரமே பொருந்தும் ஏனைய குணங்களையும்) உபயோகித்து, ஏனையவற்றை தெய்வங்கள் என வாதம் புரியும் எந்த பொய்யான கூற்றுக்களை மறுக்கவும், நிராகிக்கவும் எமக்கு முடியும்.
மேலே குறிப்பிட்டவாறு, “இறை தூது ஒன்றே” எனும் பரிசோதனை மூலம் தேடும் சத்திய வழியை மீண்டும் கவணிப்போம். புராண மதங்களின் நூல்களிலும், அல்குர்ஆனிலும் இறைவனின் ஏகத்துவத்தை உறுதிப் படுத்தும் திரு வசனங்கள் பக்கம் எமது கவணத்தை திருப்புவோம். அதற்கு முன்னால் இன்று சமூகத்தில் நிழவும் பிழையான கருத்தொன்றை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

“நிச்சயமாக, இறைவன் ஒருவனே. நாம் ஒரு இறைவனையே விசுவாசிக்கிறோம். இதில் இருக்கும் பிரச்சினை என்ன?” என்று சில கிறீஸ்தவர்கள் கேள்வி கேட்பது எமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.


கிறீஸ்து மதம் சம்பந்தப்பட்ட ஏராளமான நூல்களை நான் வாசித்திருக்கிறேன். அவற்றை பின்பற்றியும் இருக்கிறேன். அதே போல்  கிறீஸ்தவர்கள் அனேகம் பேருடன் உரையாடியும் இருக்கிறேன். அதன் விளைவாக அவர்கள் மத்தியில் இறைவன் என்ற சொல்லுக்கு விளக்கம் கூறுவதில் (அவர்களில் ஒரு கூட்டத்தின் கற்பனை படி) பின்வரும் வகையில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று எனக்கு விளங்கியது.
1.    கடவுள் பிதாவாகும்
2.    கடவுள் சுதன் ஆகும்
3.    கடவுள் பரிசுத்த ஆத்மாவாகும்
பரந்த கல்வி ஞானத்துடன், பகுத்தறிவுக்கு ஏற்ற முறையில், உண்மை என்னவென தெரிந்துக் கொள்ளும் நோக்கமுள்ள ஒருவர்  கிறீஸ்தவ மக்களிடம் இதனை பற்றி இவ்வாறு விசாரிக்க விரும்புவார்.
•    கடவுள்கள் மூவர் என்று கூறும் நீங்கள் இறைவன் ஒருவனே என்று அறிக்கை விடுப்பதன் பொருள் என்ன?
•    ஏகத்துவம் மும்மூர்த்தியலும், மும்மூர்தி கள் ஏகனுக்குள்ளும் ஐக்கியமாகிறது என்று (1ல் 3 அல்லது 3ல் 1) நீங்கள் கூறும் போது, இறைவன் ஏகன் என்று ஆகி விடுமா?
இவ்வாறான வாதங்களையும், யேசு நாதர்  அறிவித்த கொள்கைகளையும் ஒப்பிட்டு நோக்கினால், இந்த மூன்று தெய்வங்க ளுக்கு பின்வரும் உருவங்களும், வாழ்க்கை யும், பொறுப்புகளும் உள்ளதென தெரிந்துக் கொள்ள முடியும்.
1. தேவ பிதா = அவரே படைப்பவன்.
2. தேவ சுதன் = அவரே இரட்சிப்பவன்.
3. தேவ ஆத்மா =  அவரே கண்காணிப்பவர்
அவர்களது கூற்றின் படி, ஈசா மசீஹ் எனும் யேசு நாதர், தேவ சுதன் அல்லது தேவ பிதா அல்லது தேவனின் ஒரு பாகம் என தோன்றுகிறது. இவ்வுலகில் எவருக்கும் இறைவனை கண்களால் காண முடியாது என தவ்ராத் (பழைய ஏற்பாடு) திலும், பைபிளிலும் உள்ள வசனங்கள் உறுதியாக கூறும் காரணத்தால், இந்த மக்களின் கூற்றுகள் எவ்வித அர்த்தமும் அற்ற வார்த்தைகள் என எவருக்கும் விளங்குகிறது.
நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டது மில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. 5 யொவான் 37
ஒருவராய், சாவாமை உள்ளவரும், சேரக் கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக் கூடாதவருமா யிருக்கிறவர்; 1 திமெதியூ 6 -16
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடு இருக்கக் கூடாது என்றார். 33 யத்திராகமம் 20  
மேற் குறிப்பிட்ட வசனங்களையும் ஏனைய பைபிள் வசனங்களையும் கவணமாக பரிசீலனை செய்யும் போது, சில கிறீஸ்தவ மார்க்க போதகர்கள் உறுதியாக, முழுப் பொறுப்புடன் கூறும் சில விஷயங்களை பற்றி நான் அதிர்ச்சி அடைகிறேன். நிச்சயமாக எவருக்கும் இறைவனை கண்களால் காண முடியாது என்றும், அவனது குரலை காதால் கேட்க முடியாது என்றும் எல்லா மத நூல்களிலும் உறுதிப் படுத்தும் வசனங்கள் இருக்கையில், ஈசா எனும் ஜேசு நாதர் இறைவனின் மைந்தன் என மக்கள் சிலர் கூறும் வார்த்தைகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?
•    அப்படியாயின், ஜேசு நாதரையும், அவரது  குடும்ப அங்கத்தவர்களையும் உண்மையாக பின்பற்றிய ஏனையவர்களும், யூதர்களும் (மனிதர்களில் சிலர் நம்புவது போல்) ஜேசு நாதரை இறைவனின் மைந்தன் என) கருதாதது ஏன்?
•    நிச்சயமாக அல்லாஹ்வை எவராலும் கண்களால் காண முடியாது, இறைவனின் வார்த்தையை கேட்க முடியாது என்று தவ்ராத்தும், பைபிளும் பிரகடணம் செய்யும் பகிரங்கமான கூற்றின் அடிப்படை என்ன? உண்மை இவ்வாறு இருக்க, ஈசாவின் பண்புகளை கண்ட, அன்னாரது குரல் வலிமையை கேட்ட மக்கள், அவர் ஒரு தெய்வம், அவர் தேவ மகன் என்ற கொள்கையை பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டார்கள் எனும் யதார்த்தத்தை காண்கிறோம். இறைவனின் உண்மை நிலையுடன் சம்பந்தப் பட்ட, நாம் அறியாத மர்மமான விஷயங்கள் ஏதேனும் உள்ளனவா?
இறைவனை பற்றி பேசும் போது, தவ்ராத் எனும் வேதப் புத்தகம் இவற்றுக்கு மாற்றமான கருத்தை முன் வைக்கிறது.
நான் அந்தரங்கத்திலும் பூமியின் அந்தகார மான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னது மில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்த மானவைகளை  அறிவிக்கிற கர்த்தர். 45 யெசாயா 19  
அப்படியாயின் உண்மை என்ன?
மேலே குறிப்பிட்ட சில விபரங்கள்  பற்றி மீண்டும், மீண்டும் வாசித்து, அதனை பற்றி ஆழமாக  சிந்தித்துப் பாருங்கள்.

பழைய மதங்களின்  நூல்களில் உள்ள ஏக தெய்வ கொள்கை
பழைய மதங்களின் பரிசுத்த நூல்களிலும், அல் குர்ஆனிலும் இறைவனை பற்றி குறிப்பிடும் வசனங்களை பற்றிய சத்தியங்களை பற்றி பாரபட்சமின்றி இப்போது ஆராய்ந்து பார்ப்போம். இந்த வேத வசனங்களை  வாசித்து, அவை கூறும் உண்மைகளை பற்றி கவணமாக சிந்தித்து, இந்த சிறிய கைநூலில் காட்டப்படும் முக்கியத்துவத்தை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? நீங்கள் இவற்றை எவ்வாறு காண்கிறீர்கள்? என்பதை எமக்கு அறிவிப்பீர்கள் என எதிர் பார்க்கிறோம்.
இங்கு சமர்ப்பிக்கப்படும் விபரங்கள் பற்றி நீங்கள் சிந்திப்பதற்காக அவற்றில் எவ்வித கூட்டலோ, குறைத்தலோ, மாற்றமோ இன்றி வேத நூல்களில் உள்ள வாறு உங்கள் முன் வைக்கப் படுகின்றன. இந்த வசனங்களில் எவ்வித கற்பனையும் சேர்க்கப் படவில்லை. எவ்வித கலப்படமும் செய்யப் படவில்லை. இதனை பற்றி நீங்கள் மிகவும் கவணமாக பரிசீலனை செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் முன் இவற்றை சமர்க்கிக்கின்றோம்.
புனித மார்க்க நூல்கள் உண்மையான ஒரே இறைவனை பற்றி இவ்வாறு கூறுகிறது. (பழைய  ஏற்பாடு)
    இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே. 6 உபாகமம் 4
    நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்த தில்லையோ? 2 மல்கியா 10
    நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும் படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளா யிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப் பின் இருப்பதும் இல்லை. 43 எஸாயா 10
    நான், நானே கர்த்தர்; என்னையல்லா மல் ரட்சகர் இல்லை. 43 எஸாயா 11
    நான் முந்தினவரும், நான் பிந்தினவருந் தானே; என்னைத்தவிர தேவன் இல்லை. 44 எஸாயா 6
    நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள்; இதைப் பூர்வகால முதற் கொண்டு விளங்கப் பண்ணி அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னை யல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை இவ்வாறான ஏனைய வேத வசனங்களை நீங்கள் வாசித்து இருக்கிறீர்களா? எஸாயா 45;21
இவ்வாறான வேறு வேத வசனங்களை நீங்கள் வாசித்து இருக்கறீர்களா?
பைபிளின் புதிய ஏற்பாடு காட்டும் ஏக இறைவன் பற்றிய வேத வசனங்களை சற்று கவணிப்போம்.
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்து வையும் அறிவதே நித்திய ஜீவன். யொவான் 17,3
உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 4 மதெவ் 10
வேத பாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம் பண்ணுகிறதைக் கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னா ரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான். 12 மார்க் 28
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளி லெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்; இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர், 29  ....அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை. 32
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக் கும் மத்தியஸ்தரும் ஒருவரே.1 திமோதி 2.5
அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி; நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான்; 19 மத்தெயு 16
அதற்கு அவர்; நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; 17
அல்லாஹ் ஒருவனே என்று உறுதி கூறும் இன்னும் ஏதேனும் வசனங்களைஉங்களால் வேதப் புத்தகத்தில் குறிப்பிட முடியுமா?
இவை எதிலும் கடவுள் மூவர் என்ற கொள்கை எதுவும் இல்லை.

அல்குர்ஆன் கூறும் ஏகதெய்வ கொள்கை
அல் குர்ஆன் கூறும் ஏக தேவ கொள்கை பின்வருமாறு.
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4)
(நபியே) நீர் கூறுவீராக.அவன் அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் (யாவற்றையும் விட்டும்) தேவையற்றவன். (யாவும் அவனது அருளையே எதிர் பார்த்திருக்கின்றன) அவன் (எவரையும்) பெற வில்லை. அவன் பெறப் படவு மில்லை. மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை. சூரா இஃஹ்லாஸ் 112 1- 4
لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ
நிச்சயமாக என்னை தவிர (வணக்கத்திற் குரிய) வேறு யாரும் இல்லை. எனவே என்னையே நீங்கள் வணங்குங்கள். அல் குர்ஆன் 21;25
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ (73)
நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த  ஆவி ஆகிய இம்) மூவரில் மூன்றாவதான (ஒரு)வன்தான் என்று கூறியவர்கள் திட்டமாகவே நிராகரிப் போராகி விட்டார்கள்.  ஏனென்றால் (வணக்கத்துக் குரிய) ஒரே நாயனை தவிர வேறு நாயம் இல்லை. ஆகவே (மூன்றாமவன் என்று) அவர்கள் கூறுவதை விட்டும் விலகிக் கொள்ளா விடில், அவர்களில் உள்ள நிராகரிப்போரை துன்புருத்தும் வேதனை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும்.” அல் குர்ஆன் 5;73
إِنَّ إِلَهَكُمْ لَوَاحِدٌ
நிச்சயமாக உங்கள் வணக்கத்துக்கு உரிய நாயன் ஒரை நாயன் தான் அல் குர்ஆன் 37;4
أَإِلَهٌ مَعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

அல்லாஹ்வுடன், வணக்கத்துக்கு உரியவன் வேறு இருக்கின்றானா? நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால் (இதற்கு) உங்களது    அத்தாட்சிகளை கொண்டு வாருங்கள் என்று  (நபியே!) நீர் கூறுவீறாக அல் குர்ஆன் 27;64

நிச்சயமாக அல்லாஹ் ஒருவனே என்ற செய்தியே  குர்ஆன் கூறும் அடிப்படை உண்மையாகும்.

முடிவுரை
நிச்சயமாக அல்லாஹ் ஒருவனே. அவனை தவிர வணங்குவதற்கு தகுதி யானவன் யாரும் இல்லை என்ற சந்தேகத்துக்கு இடமில்லாத அளவுக்கு மேலே காட்டிய மார்க்க நூல்களிலும் அல் குர்ஆனிலும் இடம் பெறும் நூற்றுக் கணக்கான வசனங்கள் சாட்சி கூறுகின்றன.
உதாரணமாக, இயேசு அவனுக்குப் பிரதி உத்தரமாக: கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்....... மார்க்கு 12; 29  
அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை மார்க்கு 12; 32  
இதே போன்று அல் குர்ஆனில் 112;1 வசனம் கூறுவதை கவணியுங்கள். (நபியே) நீர் கூறுவீராக.அவன் அல்லாஹ் ஒருவனே.
இவ்வாறான புனித மார்க்க நூல்கள் அல்லாஹ் ஏகன் என்று உறுதிப் படுத்துவது மாத்திரமின்றி, அவன் படைப்பவன், அவன் தனித்தவன், வணக்கங்கள் யாவும் அவனுக்கு மாத்திரமே உரியன என்பதை உறுதிப் படுத்து கின்றன.
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும் படிக்கு நீங்களும் நான் தெரிந்து கொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளா யிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப் பின் இருப்பதும் இல்லை. 43 யெஸாயா 10
நான், நானே கர்த்தர்; என்னை அல்லாமல் ரட்சகர் இல்லை. 43 யெஸாயா 11
மேலே எடுக்காட்டிய இறை வசனங்கள்  யாவையும் நோக்கும் போது, யேசு, பரிசுத்த ஆவி அல்லது வேறேதின் மீது தேய்வீகத் தன்மையை சுமத்துத்துவதற்கு எந்த வித சான்றுகளோ, காரணமோ இல்லை என்று தெளிவாகிறது. இவ்வாறு கூறுவதற்கும் எந்த வித சாட்சியமும் இல்லை. அந்த தூதர்கள் அனைவரும் அல்லாஹ் ஒருவனால் படைக்கப் பட்டவர்களே யன்றி அவர்களுக்கு எந்த விதமான ஆட்சியோ, அதிகாரமோ இல்லை. இந்த தூதர்கள் எவரும் தெய்வங்களும் இல்லை. அல்லாஹ்வின் சார்பில் முன் நிற்பதற்கோ, அவனது உருவத்தில் காட்சி அளிப்பதற்கோ, அவனுக்கு நிகராக இருப்பதற்கோ அவர்கள் எவ்வித தகுதியும் பெற மாட்டார்கள். ஏனைய புனித மார்க்க நூல்களும், அல் குர்ஆனும் அவ்வாஹ்வுக்கு சமமான ஒருவரும் இல்லை என உறுதியாக கூறுகிறது.
யூதர்கள் வழி தவறிய காரணத்தாலும், அல்லாஹ்வை யன்றி மற்றவர்களை தெய்வங்களாக  எடுத்துக் கொண்டதாலும், அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உறுதி யாகியது. இதனை பற்றி பைபில் இவ்வாறு எமக்கு அறிவிக்கிறது.
இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக் கொண்டார்கள், அதனால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.” 25 எண்ணாகம் 3 - அதன் காரணமாக அவர்களது பெறுமதி வாய்ந்த வாழ்வை அல்லாஹ் நாசமாக்கி விட்டான்.
அதே நேரத்தில் யேசு நாதரிடமிருந்து இறைவனின் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட இறை பக்தர்களை அநியாயமான முறையில் யுதர்கள் இம்சை படுத்தவும், துன்பம் இழைக்கவும் ஆரம்பித்தார்கள். இந்த ஆரம்ப கிறீஸ்தவர்கள் யேசு நாதரின் போதனைகளை ஏற்றுக் கொண்டு ஏக இறைவனை மாத்திரம் வணங்கியதும், இப்போதனைகளில் மாற்றம் செய்ய மறுத்ததும்,  ஒன்றுக்குள் மூன்று தெய்வங்கள் ஐக்கியமாகி இருப்பதாக பாவுலுவும் அவருடைய சீடர்களும் உறுவாக்கிய புதிய கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததும் இவர்களுக்கு ஏற்பட்ட பெரும் துன்பங்களுக்கு காரணமாயின.
சுருக்கமாக கூறினால், ஆதம், நூஹு, இப்ராஹீம், மூஸா, ஈசா, முஹம்மத் (அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) ஆகிய அனைவரும் அல்லாஹ்வை மாத்திரம் விசுவாசம் கொண்டு, அவனை மாத்திரம் வணங்கும் படியும், அவனுக்கு இணையோ துணையோ இல்லை என்றும், அவன் பரிசுத்தமானவன் என்றும் மக்களுக்கு  அறிவித்து, அதன் பக்கம் மக்களுக்கு அழைப்பு கொடுப்ப தற்காக அல்லாஹ்வால் அனுப்பப் பட்டனர். இதன் அடிப்படையில், இவர்கள் அனைவரது இறை தூதுத்துவமும், அழைப்பும் ஒன்றே.
உண்மையான இறைவன் ஒருவனே. ஆகையால் அவனை மாத்திரம் வணங்குங்கள்.
நபிமார்களும், ரசூல்மார்களும் கொண்டு வந்த இறை தூதுத்துவம் ஒன்றாக இருக்கையில், அவர்களது மார்க்கம் வித்தியாசப் படுவது எவ்வாறு? அப்படியானால், இந்த நபிமார்கள், ரசூல்மார்களுடைய மார்க்கம் எதுவாக இருக்க முடியும்?
உண்மையிலேயே, அவர்கள் கொண்டு வந்த தூதின் முக்கிய அம்சம் “அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிவது” என்ற செயலை அடிப்படையாக கொண்டது. இஸ்லாம் எனும் வார்த்தை சுட்டிக் காட்டும் கொள்கையும் அதுவே. இஸ்லாம் என்பது அதன் அரபு  அர்த்தமாகும்.
அனைத்து நபிமார்களின், ரசூல்மார்களின் உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்று அல் குர்ஆன் வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. குர்ஆன் காட்டும் இந்த  உண்மை நிலையை ஏனைய மார்க்கங்களின் புனித நூல்களும்  பின்பற்றுவதை எம்மால் காண முடிகிறது.
இறுதியாக, இந்த விளக்கங்கள் தெரிவிக்கின்ற முறையில், உண்மையாகவும் நேர்மையாகவும் இந்த இறுதிக்  தூதின் மீது நம்பிக்கை வைப்பதும், அதனை மற்றவர்களுக்கு  அறிவிப்பதும் எமது  தலையாய கடமை என சுட்டிக் காட்டப் படுகிறது. இந்த நம்பிக்கையுடன் மாத்திரம் எமது கடமை முடிந்து விடாது. அல்லாஹ்வின் தூதர்கள், ரசூல்மார்கள் அனைவர் மீதும் நம்பிக்கை வைப்பதும்  எமது கடமையாகும். (இவ்வாறு நம்பிக்கை வைப்பது, முஹம்மத் ஸல்லல்லாஹு  அலைகிவஸல்லம் அவர்கள் அனைவர் மீதும் நம்பிக்கை வைப்பது சம்பந்தப் பட்ட ஒரு விஷயமாகும். அத்துடன் அவர்களுடைய (பழைய நபிமார்களின்) வழி காட்டலையும் பின் பற்ற வேண்டும். அவற்றின் படி செயலாற்ற வேண்டும். என்றென்றும் நிலையான மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு இதுவே வழி காட்டும்.
நேர்மையாக சத்தியத்தை தேடும்  மக்களே! நேர்மையை விரும்புகிறவர்களே! இந்த விஷயங்கள் பற்றி சற்று நிதானமாக சிந்தனை செய்து பாருங்கள். இந்த கணத்திலிருந்து சிந்திக்கத் தொடங்குங்கள். உங்களுடைய விலை மதிப்பு கூற முடியாத காலமும், நேரமும், வீணாவதற்கு முன் சிந்திக்கத் தொடங்குங்கள். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்கள் மரணம் உங்களை கைப்பற்றிக் கொள்வதற்கு முன்னரே சிந்திக்கத் தொடங்குங்கள்.
நேர்மையான உள்ளத்துடன், விவேகத்துடன் இந்த முக்கியமான  விஷயத்தை பற்றி சிந்திப்பதன் மூலம், மீண்டும் மீண்டும் உண்மையின் பக்கம் சிந்தனை செலுத்திய பின், அல்லாஹ்  ஒருவனே, அவனுக்கு எந்த துணையும் இல்லை, அவனுக்கு பிள்ளை இல்லை என்று விளங்கிக் கொள்வதற்கும், அவனை மாத்திரம் விசுவாசம் கொள்வதற்கும், அவனுக்கு மாத்திரம் வணக்கங்களை நிறைவேற்ற வும், நிச்சயமாக முஹம்மத் (ஸல்லல்ஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈசா போன்ற நபிமார்களும் ரஸூல் மார்களும் அல்லாஹ்வின் உண்மையான தூதர்கள் என்றும் நம்பிக்கை கொள்வதற்கும் உங்களால் சாத்தியமாகும்.
இப்போது நீங்கள் விரும்பினால் கீழ் காணும் சாட்சியத்தை உங்களால் மொழிய முடியும்.
أشهد أن لا إله إلا الله و أشهد أن محمداً رسول الله
அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ்
இதன் விளக்கம் – வணக்கத்துக்கு தகுதியான இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். அத்துடன், நிச்சயமாக முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதர் என்றும் சாட்சிக் கூறுகிறேன்.
என்றென்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் வாழ்க்கையை நோக்கி முதல் காலடி வைப்பது இந்த சாட்சி கூறுதன் மூலமே. சுவர்க்கத்தின் கதவை திறக்க கூடிய சரியான  சாவியும் இதுவே.
இந்த வழியை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்துவதற்கு நீங்கள் தீர்மானித்தால் உங்கள் முஸ்லிம் நண்பனிடம், அல்லது அருகில் உள்ள இஸ்லாமிய பள்ளி வாசலிடம் அல்லது இஸ்லாமிய மத்திய நிலையத்திடம் சென்று அவர்களிடம் உதவி தேடுங்கள்.
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ  وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ  القرآن الكريم – رقم السورة 39: آيات 53-55
தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டாராகிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் இருந்து  (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசை யுற்றாராக  நீங்கள் ஆகி விட வேண்டாம்.  நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாவங்கள் யாவையும்  (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்து விடுவான். (ஏனெனில்) நிச்சயமாக அவன் தான் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபை உடையவன் என்று (நபியே!) நீர் கூறுவீறாக.
இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்கள் இரட்சகனின் பால் (தவ்பா செய்து) திரும்பி விடுங்கள். அவனுக்கு (முற்றிலும்)  நீங்கள் கீழ படிந்தும் விடுங்கள். (வேதனை வந்து விட்டால்)  பின்னர் (எவராலும்) நீங்கள் உதவி செய்யப் பட மாட்டீர்கள்.
(மனிதர்களே!) நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்கள்  இரட்சகனிடம் இருந்து உங்கள் பக்கம் இறக்கி வைக்கப்பட்ட மிக்க அழகான வற்றையும் பின்பற்றுங்கள். சூரா அல் ஜுமர் 39 53 – 55.
இதில் இன்னுமொரு முக்கியமான விஷயம் ஒன்று உண்டு.
இறுதியாக ஒரு யோசனை........
“இறை தூது ஒன்றே” என்ற இந்த சிறிய புத்தகத்தை வாசித்த பின், அதன் அடிப்படையில் மேலும் ஆராய்ச்சி நூல்களை வாசித்த பின், நற்குணங்கள் கொண்ட, சத்தியம் என்னவென்று தேடும் மனிதர்கள் இதனை பற்றி தமக்குள் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள்.
இவ்வாறான கேள்விகள் பற்றியும், மேலும் விபரங்கள் பற்றியும் கூடிய சீக்கிரம் விளக்கம் கூறுவதற்கு எதிர் பார்க்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாத்தை பற்றிய மேற் கொண்டு விபரங்கள் அறிய வேண்டுமாயின் உங்களுக்கு அருகில் இருக்கும் பள்ளி வாசலுக்கோ, இஸ்லாமிய அறிவிப்பு மையத்துக்கோ வருகை தரவும்.